முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Saturday

"தெருமுனை பிரச்சாரம்"

இன்ஷா அல்லாஹ் . . .
நாளை (19-1-2014) அன்று சரியாக மாலை 4pm அளவின் மரைக்காயர் பட்டினம் கிழக்கு தெரு வில் "முஸ்லிம்களின் சிறை செல்லும் போராட்ட்டம் ஏன் ? என்ற தலைப்பில் மாபெரும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற உள்ளது ,அனைவரும் வந்து கலந்து கொள்ளும் மாறும் அன்புடன் கேட்டு கொள்கிறோம் . .
.

உரை : சகோ ரஹ்மான் அலி M.I.S.C

தேதி : 19-1-14 , ஞாயிற்று கிழமை


நேரம் : 4PM - 6PM


அன்புடன் அழைக்கிறது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

மரைக்காயர் பட்டினம் கிளை
இராமநாதபுரம் கிளை . . . ..

உதவி செய்யுங்கள் . . . .

இன்ஷா அல்லாஹ் . . .




தொடர்புக்கு :
தமிம்
பொருளாளர்
மரைக்காயர் பட்டினம் கிளை . . . .

தொடர்புக்கு :
9092569935
9626847108
(எழுத்து பிழை இருந்தால் மனிக்கவும்). . .

Sunday

"தெருமுனை பிரச்சாரம்"

 ஏக இறைவனின் திருப்பெயரால்

"தெருமுனை பிரச்சாரம்"

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சீனியப்பா தர்கா கிளை சார்பாக 5-1-2014 அன்று

அசர் தொழுகைக்கு பின் சீனியப்பா தர்கா வில் உள்ள குலத்திற்கு எதிரில்

அனல் பறக்கும் பிரச்சாரம் நடைப்பெற்றது .

இதில் சகோ அரசத் அலி அவர்கள் (மாவட்ட தாயி) அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத்

ஜமாஅத் நடத்தும் ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட்டம் ஏன் ? என்ற

தலைப்பில் பிரச்சாரம் செய்தார் ,இதில் அனைவரும் கலந்து கொண்டு

சிறப்பித்து பயன் அடைந்தனர் . . .

அல்ஹம்துலில்லாஹ் . . .

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,சீனியப்பா தர்கா கிளை சார்பாக 4-1-2014 அன்று
நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம் முடிவில் பிரச்சாரத்திற்கு காவலிற்கு
வந்திருந்த காவல் துறை அதிகாரிக்கு "மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் " என்ற
நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகம் சீனியப்பா தர்கா
கிளை சார்பாக அளிக்கப்பட்டது . . .

அல்ஹம்துலில்லாஹ் . . . .

Saturday

"உள் அரங்கு நிகழ்ச்சி"

அஸ்ஸலாமு அழைக்கும்

இன்ஷா அல்லாஹ் .

"உள் அரங்கு நிகழ்ச்சி"

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக நாளை (29/12/13) அன்று மாலை 4மணி அளவில் தவ்ஹீத் மர்கசில் உள் அரங்கு நிகழ்ச்சி மாபெரும் சிறை செல்லும் போராட்டம் ஏன் ? எதற்கு ?
 உரை : சகோ அன்சர் misc

நேரம் : மாலை 4PM

தேதி : 29/12/13

இடம் : தவ்ஹீத் மர்கஸ்,மரைக்காயர் பட்டினம்

தொடர்ப்புக்கு :
தமிம் 9626847108

www.tntjmp.blogspot.com

அன்புடன் அழைக்கிறது
தமிழ் நாடு
தவ்ஹீத் ஜமாஅத்
மரைக்காயர் பட்டினம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம் . . .

Friday

ஜனவரி 28 போராட்டம் : ஜமாத்தார்களுக்கு அனுப்ப வேண்டிய கடிதம்

அன்பிற்கினிய ஜமாஅத் நிர்வாகிகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.
இந்தக்கடிதம் பூரண உடல் நலத்துடனும், தூய இஸ்லாமிய சிந்தனையுடனும் கிடைக்கப்பெற அல்லாஹ்விடம் துவாச் செய்கின்றோம்.

இந்தியாவில் முஸ்லிம்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கி உள்ளார்கள் என்பது தாங்கள் அறிந்ததே.இந்திய சுதந்திரத்திற்காக பெருமளவில் பாடுபட்ட நமது முஸ்லீம் சமுதாயம் இன்று சொந்த நாட்டிலேயே பல்வேறு துன்பங்களுக்கும் மத்தியில் தீவிரவாதி என்ற முத்திரையுடன் வாழ்ந்து வருகின்றது.
இவற்றுக்கெல்லாம் காரணம் நம் சமுதாயத்திற்கு கல்விஅறிவு இல்லாததும், அரசு இயந்திரத்தை இயக்கும் அதிகாரிகளாக நாம் இல்லாததும்தான்.

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம்


 அஸ்ஸலாமு அழைக்கும்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளையின் சார்பாக வருகின்ற ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் போஸ்டர் மற்றும் சேவூர் விளம்பரம் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது . . .

போராடுவோம் இழந்த உரிமையை மீட்போம் . . . .

அல்ஹம்துலில்லாஹ் . .. . .

Wednesday

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

 அஸ்ஸலாமு அழைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக 16-10-13 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது, இதில் திரளான ஆண்களும்,பெண்களும்,சிறுவர்களும்,மிக ஆருவத்துடன் அதிகாலையில் நபி வழி தொழுகையில் கலந்துகொண்டனர் . . . . .

 இதில் சகோ அப்துல் ரஹீம்(மாவட்ட தாயி) அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்,புனித ஹஜ் திடல் தொழுகை மற்றும் இந்த நாளின் நன்மைகளை பற்றியும் குருபானியின் முறைகளை பற்றியும் மக்கள் முன்னாள் எடுத்துரைத்தார் . . . . .
அல்ஹம்துலில்லாஹ் . . . . . .

Sunday

இரத்ததான முகாம்



1-9-13 அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் வெளிப்பட்டினம் கிளை சார்பாக மற்றும் அரசு மருத்துவ மனை சார்பாகவும் இலவச இரத்ததான முகாம் நடைப்பெற்றது,இதில் மாவட்டம் S.P அவர்கள் கலந்துகொண்டு காளை சுமார் 10.30 மணி அளவில் தொடங்கி வைத்தார்கள் ,இதில் வெளிப்பட்டினம் கிளை நிருவாகிகள் கலந்து கொண்டு சிரபித்துதந்தார்கள்.

காளை 10.30 மணி அளவில் தொடங்கிய முகாம்யில் ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார்கள் . . .

இந்த முகாம் முஸ்லிம்,ஹிந்து,கிறிஸ்துவர்கள் ஒற்றுமையை  காட்டும் நோக்கில் எல்லாம் வல்ல ஏக இறைவனின் அருளால் மிக பெரிய அளவில் நடைப்பெற்றது . . .

அல்ஹம்துளில்லாஹ் . . .

தகவல் :எம்.தமிம் அன்சாரி

Saturday

காய்... கறி... கனி... மருத்துவ குணங்கள் :--



காரட்:

தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதி
ர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

முட்டைக்கோசு:
மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.


பீட்ரூட்:
ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.


இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.



வெங்காயம்:
வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள்:
இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.இரத்தத்த
ில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.

அன்னாசி:
இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.

எலுமிச்சம்பழம்: உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில்இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.



பூண்டு:
இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.

சுரைக்காய்:
இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.


வெள்ளரிக்காய்:
இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.


தர்ப்பூசணி:
இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.


முள்ளங்கி, வெண்டைக்காய்:
இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்
...


மரைக்காயர் பட்டினம் - தாவா

அஸ்ஸலாமு அழைக்கும்

31-8-13 அன்று மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக வரதட்சனையை ஒழிக்க வரதட்சனையை வாங்காதிர்கள் என்ற அட்டை ஓட்டபட்டுள்ளது , எளிமையான திருமணத்தை செய்வோம் வரதட்சனையை அடியோடு ஒழிப்போம் . . .

அல்ஹம்துலில்லாஹ் . . . . .

Tuesday

maraikayar pattinam welcomes you

மரைகாயர்பட்டினம் (Maraikayarpattinam) இது இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும். 1950 வரை இவ்வூர்வாசிகள் கடல் வணிகம் செய்துவந்தனர். இலங்கையில் கொழும்பு,சிலாபம்,யாழ்ப்பாணம்,திரிகோணமலை,புத்தளம்,கல்முனை போன்ற துறைமுகங்கள் மற்றும் பர்மா-இன்றைய மியான்மரின் ரங்கூன்,வங்காளதேசதின் டாக்கா, போன்ற துறைமுகங்கள் இவர்களின் காலடிதடங்களையும் மரக்கலங்களையும் அதிகம் வரவேற்றவை.



இதுபோக பாரசீகம் என அழைக்ககப்பட்ட ஈரான், அதையடுத்த ஈராக்,குவைத், மேலும் எத்தியோப்பியா,எகிப்து,நாடுகளின் துறைமுக நகரங்களையும் அவ்வப்போது அடைந்து வணிகத்தில் ஈடுபட்டனர்.ஆஸ்திரேலியா கண்டுபிடிக்கப்ப்டாத காலத்திலேயே அங்கு காலடி பதித்தவர்கள் என்பது சுவையான செய்தியாகும். நியூசிலாந்து கடலில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட "முகைதீன் வக்காஸ் கப்பல் மணி" என்ற பெயர் பொறிக்கப்பட்ட நங்கூர மணியே இதற்கு சான்றாகும். மரம்+கலம்+ராயர் - மரத்தால் செய்யப்பட்ட கலம்(கப்பல்) ன் உரிமையாளர் என்பதே மரக்கலராயர் என்பதாகும். இது மருவியே மரக்காயர் ஆனது. மரக்காயார்கள் மட்டுமே உள்ள ஊர் என்பதால் இப்பெயர் வந்திருக்கலாம்.
தகவல்
mohamed abdul raheem


மரைக்காயர் பட்டினம்
எம்.தமிம்

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை TNTJ கிளை-தாவா


கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை TNTJ கிளை சார்பில் 12.08.2013 அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது.

சகோ.முபாரக் அவர்கள் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து "இஸ்லாத்தின் பார்வையில் கல்வி " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

அப்துல்லாஹ் பெரியார்தாசன் மரணம்: சென்னை மருத்துவக்கல்லூரிக்கு உடல் தானம்


வாழ்க்கை குறிப்பு
இறந்த சகோ அப்துல்லாஹ் பெரியார்தாசனின் சொந்த ஊர் ஆற்காடு அடுத்த திரிமி கிராமம். 1949–ம் ஆண்டு வீராசாமி, சாரதா தம்பதிகளுக்கு மகனாக பிறந்த அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சேஷா. பெரியார் மீது கொண்ட ஈர்ப்பால் தனது பெயரை பெரியார்தாசன் என்று மாற்றிக்கொண்டார்.
கடந்த 2010–ம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறிய அவர், தனது பெயரை அப்துல்லா பெரியார்தாசன் என்று மாற்றிக்கொண்டார். பெரியார்தாசனின் மனைவி பெயர் வசந்தா (62), இவர்களுக்கு வளவன் (35), சுரதா (32), என 2 மகன்கள் உள்ளனர்.
பெரியார்தாசன் ம.தி.மு.க. உயர்நிலை குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தார். 34 வருடங்களாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவ உளவியல் துறை பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா, உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்றங்களில் பங்குபெற்றார். 54 புத்தகங்களை எழுதியுள்ளார்.

Monday

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - தாவா



இஸ்லாத்தை ஏற்று கொண்ட சகோ அப்துல்லாஹ் ராஜமாணிக்கம்
Rajamanickam Gunaseelan அவர்கள் வாகனத்தில் செல்லும் பொது மாற்று மத நபருக்கு இஸ்லாமிய புத்தகம் குடுத்து தாவா செய்தார் , இவரின் தாவா பணிகள் மேலும் மேலும் சிறப்பாக செய்வதற்கு நம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துவா செய்வோமாக . . .

இது போல் ஆருவம் பிறப்பிலே இஸ்லாமியர்களாக வாழும் நமக்கு எப்போது வரும் , வரும் வரும் என்றால் வராது இது போல் பணிகளை துணிந்து செய்வதற்கு எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் வை மனதில் வைத்துகொண்டு நாமும் நமது துய இஸ்லாத்தின் பண்புகளை பிறருக்கு எத்திவைபோமாக . . . .

அல்ஹம்துலில்லாஹ் . . .

S.P.பட்டிணம் கிளை-ஜனாஷா அடக்கம்

PostHeaderIconஏக இறைவனின் திருப்பெயரால்....
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் S.P பட்டினம் கிளையின் மூத்த உறுப்பினர் சகோதரர் ந.மு.அ.சையிது ஹாஜியார் அவர்கள் 17/08/2013 அன்று காலை 5.45.மணியள்வில் காரைக்குடி அப்போலோ மறுத்துவமனையில் வபாத்தானார்கள்
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜியூன்
அவர்க்ளின் ஜனாஸா மறுனாள் காலை 8.00 மணியளவில் அவர்களின் இல்லதில் பெண்களுக்கும் வெளிப்பகுதியில்  நீண்டதெருவில் ஆண்களுக்கும் ஜ்னாஸா தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டதுதொழுகையின் போது அவர்களின் மகனான சகோதரர் ஃபிர்தவ்ஸ் அவர்களிடம் அனுமதி பெற்று தொழுகை நடத்தினார் 
TNTJ மேலான்மை குழு உறுப்பினர் சகோதரர் ஃபக்கீர் முகமது அல்தஃபி அவர்கள் 
பிறகு ஜமாஅத்தின் பொது மைய்யவாடிக்கு ஜனாஸா எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட பிறகு சிறிது நேரம்
 மரணத்தின் சிந்தனை என்றதலைப்பில் அல்தாஃபி அவர்கள்
உரை நிகழ்த்தினார்கள் இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வகிகள் அதிகமான கிளை நிர்வாகிகள் மற்றும் அதிகமான கொள்கை சகோதரர்களும் உள்ளுர் மக்களும் கலந்துகொண்டனர் .

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்